t

காதலன்சந்தேகம் பிரீத்தி தீக்குளிப்பு ?லாட்ஜில்ஏன்தனியா ரூம் போட்டே?

advertisement by google

advertisement by google

ப்ரீத்தி.. இந்த லாட்ஜில் ஏன் தனியா ரூம் போட்டே? நான் சொன்ன இடத்தில் ஏன் ரூம் போடல?” என்று காதலன் சந்தேகத்துடன் கேட்டதால், ப்ரீத்தி மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தி கொண்டு இறந்துவிட்டார்.

advertisement by google

மன்னார்குடி அடுத்த நீடாமங்கலம் வெண்ணாற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் பிரீத்தி. இவருக்கு அப்பா இல்லை, 4 வருடம் முன்பு இறந்துவிட்டார். அம்மாதான் வளர்த்து வந்துள்ளார். கோவை தனியார் என்ஜினியரிங் காலேஜில் ஹாஸ்டலில் தங்கி பிரீத்தி படித்து வந்துள்ளார்.

advertisement by google

சில மாசத்துக்கு முன்பு, மத்திய அரசின் தபால் ஊழியர்களுக்கான தேர்வு எழுதி வெற்றி பெற்றதால், தபால் ஊழியராக தாமரைக்குளம் அடுத்த எடகீழையூரில் வேலையில் போன மாசம் பிரீத்தி சேர்ந்துவிட்டார்.

advertisement by google

மண்ணெண்ணெய்புதிய வேலை என்பதால், கடந்த 20 நாட்களாக தன்னுடைய தாத்தா வீட்டில் தங்கிதான் வேலைக்கு போய் வந்துள்ளார். 4 நாளைக்கு முன்பு நண்பர்களை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கோவை சென்ற பிரீத்தி, திங்கட்கிழமை ராத்திரி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார்.விசாரணைஅவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்றும் பிரீத்தியின் உடல் கருகிவிட்டது. இதையடுத்து, மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான், பிரீத்தி காலேஜில் ஒருவரை காதலித்துள்ளார், ஆனால் வேலை கிடைத்ததும் அவருடன் முன்புபோல பேச நேரம் இருப்பது இல்லை போலும்.லாட்ஜ்அதனால் காதலனை பார்க்க கோவை வருவதாக சொல்லவும், ஒரு ஓட்டலை சொல்லி அங்கே ரூம் போட சொல்லி உள்ளார். ஆனால், பிரீத்தி வேறு ஒரு லாட்ஜில் ரூம் போட்டதாக கூறப்படுகிறது. இதுதான் காதலனுக்கு பிரச்சனையாகி விட்டது.துரோகம்சொன்ன இடத்தில் ரூம் போடாமல், தனியாக ஓட்டலில் ரூம் போட்டு தங்கியதால், காதலனுக்கு சந்தேகம் அதிகமாகி உள்ளது. இதனால் தகராறும் வெடித்துள்ளது. “இங்க ஏன் ரூம் போட்டே.. நான் சொன்ன இடத்தில் ரூம் போடலயே ஏன்? நீ என்னை ஏமாத்திட்டே… துரோகம் பண்ணிட்டே” என்று சரமாரியாக திட்டவும், பிரீத்தி அதிர்ச்சியாகி உள்ளார்.விரக்திஏற்கனவே வீட்டில் பூர்வீக சொத்தை விற்பதால் வேதனையில் இருந்துள்ளார் பிரீத்தி. இன்னொரு பக்கம், தனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிடவும், அது சம்பந்தமான அதிருப்தியிலும் இருந்துள்ளார். இப்போது காதலனும் இப்படி பேசியதால் நொந்து போன பிரீத்தி, அன்று இரவே தாத்தா வீட்டுக்கு வந்த பிரீத்தி, திடீரென உடலில் மண்ணெண்யை ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button