இந்தியா

சிக்கிய பாலியல் கும்பல்,தப்பி ஓடிய விடுதி ஒனர்

advertisement by google

பாலியல் கும்பல்,கும்பல் கும்பலாக தப்பி ஓட்டம் :சிக்கிய பாலியல் கும்பல்.. தப்பிய விடுதி ஓனர்..
காசியாபாத் நகரில் பாலியல் மோசடியில் ஈடுபட்ட வந்த பெண்கள் உட்பட 19 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

advertisement by google

உத்திர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள சில சொகுசு விடுதிகளில் பாலியல் தொழில் நடந்து வருவதாக இந்திராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் கடந்த சனிக்கிழமை இரவு அதற்கான ஆபரேஷனை மேற்கொண்டனர்.
பாலியல் மோசடி நடந்து வருவதாக தகவலை உறுதி செய்த போலீசார், உதவி சூப்பிரண்டு கேஷவ் குமாரின் உத்தரவை அடுத்து சம்மந்தப்பட்ட மூன்று விடுதிகளுக்கு விரைந்தனர். மப்டியில் இருந்த போலீசார் கஸ்டமரை போல நடித்து பாலியல் மோசடியில் ஈடுபட்டு வந்த 19 பேரை கைது செய்தனர். இதில் 10 பேர் ஆண்களும் 9 பேர் பெண்களும் என குறிப்பிடத்தக்கது.

advertisement by google

இது குறித்து காசியாபாத் அசிஸ்டன்ட் சூப்பிரண்டு கேஷவ் குமார் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள கும்பல் வாட்சப் மூலமாகவே தகவல்களை பகிர்ந்து கொண்டு வாடிக்கையாளர்களை ஈர்த்து வந்துள்ளனர். உல்லாசத்துக்காக தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு முதலில் அழகிகளின் புகைப்படங்களை அனுப்பி வைக்கப்படுகிறது.

advertisement by google

தேர்வு செய்யப்படும் அழகிகள் வாடிக்கையாளர்கள் தங்கி இருக்கும் குறிப்பிட்ட விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மோசடி கும்பலை பிடிக்கும் பொழுது விடுதியின் உரிமையாளர்கள் தப்பி ஓடி விட்டதாகவும், அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.

advertisement by google

கைது செய்யப்பட்டவர்கள் வைத்திருந்த 24 செல்போன்கள், ஆணுறைகள் மற்றும் 16 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button