தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் ஆடி 3-வது செவ்வாய்க் கிழமையை முன்னிட்டு மாரியம்மனுக்கு காலை 7 மணிக்கு புஷ்ப பாவாடை அலங்காரமும், மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாரணையும் நடந்தது. மாலை 4 மணிக்கு நவ கன்னிகா பூஜையுடன், அம்மனுக்கு பல வகையான பூக்களுடன் புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. இரவு 7 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு வளையல், குங்குமம், மஞ்சள் கயிறு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google