கழுதை கறியை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்ற மூட நம்பிக்கையில்ஆந்திராவில் அடிச்சு தூக்கும் கழுதை கறி, கிலோ 600 விற்பனை✍️கழுதை கறியை விற்ற 11 பேர் கைது✍️ ஆந்திரபோலீசார் அதிரடி✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
ஆந்திர மாநிலத்தில் உள்ள பாபட்லா மாவட்டத்தில் சட்ட விரோதமாகக் கழுதை கறி விற்கப்படுவதாக விலங்கு நல ஆர்வலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. பிறகு இதையடுத்து வந்த காவல்துறையினர் பாபட்லா மாவட்டத்தில் நான்கு இடங்களில் சோதனை செய்தனர். இதில் கழுதை கறி விற்பனை செய்யப்படுவது உறுதியானது.
அங்குள்ள உசிலிப்பேட்டை பகுதியில் 2 இடத்திலும், வேடபாலுத்தில் ஒரு இடத்திலும், சிராலா பகுதியில் ஒரு இடத்திலும் என 4 இடத்தில் ஒரு கிலோ கழுதை கறி ரூ.600க்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. பிறகு கழுதை கறியை விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவர்களிடம் இருந்து 400 கிலோ கழுதை கறியைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கழுதைகளை வெட்டி அறுப்பது சட்டவிரோத செயல் ஆகும். இந்த செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டு சிறைதண்டனை வழங்கப்படும். மேலும் கழுதை கறி வாங்குவதும் சட்டவிரோதமாகும்.
கழுதை கறியை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்ற மூட நம்பிக்கையில் பொதுமக்கள் பலர் வாங்கி சாப்பிடுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.