நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை✍️மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை ✍️✍️விண்மீன்நியூஸ்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை✍️மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூடியூப் சேனலில் தெரிவித்தது தொடர்பாக யூடியுபர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு, ‘இவ்வழக்கு விசாரணை குறித்து பொது வெளியில் விவாதிக்க மாட்டேன் என உத்தரவாதம் அளிக்க வேண்டும்’ என கூறினர்.
இதனை ஏற்க மறுத்த சங்கர், ‘பொது வெளியில் பேசமாட்டேன் என உத்தரவாதம் அளிக்க இயலாது. இவ்வழக்கை விசாரிக்கும் இந்நீதிமன்ற அமர்வு மீது எனக்கு நம்பிக்கை இல்லை. பதிலளிக்க கால அவகாசம் தேவை’ எனக் கோரியிருந்தார். இதனையடுத்து இந்த வழக்கு செப்.,15க்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, இன்று (செப்.,15) விசாரணைக்கு வந்த வழக்கில், சங்கர் நேரில் ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். இதையடுத்து வழக்கின் உத்தரவு பிறப்பிப்பதற்காக சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு சங்கருக்கு 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டனர். இந்த சிறை தண்டனை குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது.