சிரிக்க சிந்திக்க

தினமும் ரூ.2000 சம்பளம்.. பிச்சை எடுக்க வரியா? கடை உரிமையாளரை ஏளமாக கேட்ட பிச்சைக்காரர்✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

தினமும் ரூ.2000 சம்பளம்.. பிச்சை எடுக்க வரியா? அதிர வைக்கும் ஆஃபர்!

advertisement by google

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் கடைவீதியில் ஏராளமான நபர்கள் தினமும் பிச்சை எடுப்பது வழக்கம். இந்நிலையில் சாட்டையால் அடித்துக் கொண்டு பிச்சை எடுத்த நபர் ஒருவர் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பிச்சை கேட்டுள்ளார்.

advertisement by google

அப்போது, அந்தக் கடையின் உரிமையாளர், கை கால்கள் நன்றாக தானே இருக்கிறது என் கடைக்கு வேலைக்கு வா சம்பளம் தருகிறேன் என கூறி உள்ளார். சம்பளம் எவ்வளவு தருவாய் என அந்த பிச்சை எடுக்கும் நபர் கேட்டபொழுது 400 ரூபாய் ஒரு நாளைக்கு தருகிறேன் என கூறி உள்ளார்.

advertisement by google

அதற்கு அந்த பிச்சை எடுத்த நபரோ 400 ரூபாய்க்கு நான் வேலை செய்ய வேண்டுமா? நான் ஒரு நாளைக்கு 2000 சம்பாதிக்கிறேன் என ஏளனமாக பதில் அளிக்கிறார். அதற்கு உரிமையாளர் இப்படி ஓசிய கொடுத்தால் கொடுத்தால் நீ சம்பாதிக்க தான் செய்வாய் என கூறுகிறார்.

advertisement by google

திருப்பூர் சாலைகளில் ஓடும் சாயக்கழிவு… வேதனையில் தவிக்கும் மக்கள்!

advertisement by google

பிச்சை கொடுப்பதாக இருந்தால் இருக்கு என சொல்லுங்கள். இல்லை என்றால் இல்லை என சொல்லுங்கள். நீ வா என்னோடு உனக்கு 2000 தருகிறேன் எனக் கூறியபடி அந்த பிச்சை எடுக்கும் நபர் அங்கிருந்து செல்கிறார். கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button