தூத்துக்குடி மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவில்பட்டி துனைகண்கானிப்பாளர் உதயசூரியன் பாராட்டு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
தூத்துக்குடி மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஎஸ்பி பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம் சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி தூத்துக்குடி தருவை மைதானம் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
வயது அடிப்படையிலும் ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக போட்டி நடைபெற்றது.
ஒற்றை கம்பு,இரட்டை கம்பு, தொடு முறை ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை தூத்துக்குடி மாவட்ட இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அதிகாரி உயர்திரு பேட்ரிக் போட்டியைத் துவக்கி வைத்தார்.
இப்போட்டியில் கோவில்பட்டி ஃபினிக்ஸ் தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டு மைய மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்று சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்கள் விபரம் ;
வேல்ராஜ், அருள்குமார், அர்ஜுன், விஜய் சக்திவேல், சிவகார்த்திகேயன், புவினா ஜாஸ்மின், கோகுல் ஸ்ரீ ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
ஆனந்த கருப்பசாமி, கௌதம், நவீன் ராஜ், செந்தூர் முருகன், ஜீவா, பிரவீன், ஸ்ரீராம், லோகேஷ் இன்பத்தமிழன், பிரசாத், லட்சுமி, மாதேஷ், ஜெய் ஸ்ரீ ராம், பிரனேஷ் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்
சிவபாலன், இன்பராஜ், லோகேஷ், ஹரி சுந்தர், மாதவ்,ஜீவ பிரின்சி ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும் பயிற்சி அளித்த சிலம்ப மாஸ்டர் பால முருகன் அவர்களையும் காவல் துணை கண்காணிப்பாளர் உயர்திரு உதயசூரியன் அவர்கள் பாராட்டி ஊக்கப்படுத்தினார்.