கோவில்பட்டியில் மறைந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று மாலை அணிவித்து மரியாதை✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள் விழா
கோவில்பட்டியில் மறைந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கோவில்பட்டி – இளையரசனேந்தல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் மறைந்த தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் உருவப்படத்திற்கு கோட்டாட்சியர் சங்கரநாராயணன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி, துணைத் தலைவர் நம்பிராஜன், செயலர் காளிதாஸ், மாவட்டத் தலைவர் நடராஜன், துணைத் தலைவர் சாமியா ஆகியோர் நாராயணசாமி நாயுடுவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் தமிழ் விவசாயிகள் சங்க உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.