சிவகாசி நாரணாபுரம் விலக்கில்,திறந்த நிலையில் செப்டிக்டேங்க்; ✍️சுகாதாரக்கேட்டில் நாரணாபுரம் விலக்கு ரோடு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
திறந்த நிலையில் செப்டிக்டேங்க்; சுகாதாரக்கேட்டில் நாரணாபுரம் விலக்கு ரோடு
சிவகாசி : சுகாதார வளாக செப்டிக்டேங்க் கழிவுகள் திறந்த வெளியில் விடப்படுவதால் சிவகாசி நாரணாபுரம் நான்கு விலக்கு ரோடு , பாரதி நகர் பகுதி மக்கள் சுகாதார சீர்கேடால் பரிதவிக்கின்றனர்.
இப்பகுதி பாரதி நகரில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா காணப்பட்டதோடு சரி.இன்று வரை செயல்படவில்லை.இதனால் இப்பகுதியினர் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. தெருக்களில் சாக்கடை துார்வாரப்படாமல் சிறிய மழை பெய்தாலும் கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. இந்தரோட்டிலிருந்து பைபாஸ் ரோடு முழுவதுமே இருபுறமும் மணல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதனால் டூ வீலரில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். விலக்கு ரோட்டின் முக்கு அடி பைப் செயல்படவில்லை. இதே பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.