ஜான்சன் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா✍️ மைக்ரோபாய்ன்ட் கல்வி நிறுவனத்தில்✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
ஜான்சன் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா
ஜான்சன் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மைக்ரோபாய்ன்ட் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மைக்ரோ பாய்ன்ட்
கல்வி நிறுவன தாளாளரும் ஜான்சன் மக்கள் நல அறக்கட்டளை தலைவருமான ஆர்ம்ஸ்டிராங் தலைமை வகித்தார்.
கே ஜி எம் மேல் நிலைப் பள்ளி ஆசிரியை ஜேசு ஹெனா வரவேற்றார்.
தலைமை போதகர் நவராஜ் எலியேசர் சிறப்புரை ஆற்றினார்.
அக்கு பஞ்சர் மருத்துவர் சேவியர் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார் .
மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு வேஷ்டி, சேலை , மளிகை பொருட்களை ஜான்சன் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் ஆர்ம்ஸ்டிராங் வழங்கினார்.
விடி வெள்ளி கல்வி அறக்கட்டளை இயக்குனர் ஷீலா ஜாஸ்மின், திருமண்டல நற்செய்தி பணியாளர் ஞானசேகர் மற்றும் சாமுவேல் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் தில்வியா ஏஞ்சலின் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஜான்சன் மக்கள் நல அறக்கட்டளை இயக்குனர்கள்
பரமானந்தம், காருண்யா, அமிர்சன், கிருபா ஐஸ்வர்யா, ரோஜர் அப்ரின், மனிஷ் அகிஷர் ஆகியோர் செய்திருந்தார்கள்.