t

காஞ்சியில் பரபரப்பு,மாடு மேய்க்க சென்ற பெண்ணிடம் கைவரிசை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

மாடு மேய்க்க சென்ற பெண்ணிடம் கைவரிசை: காஞ்சியில் பரபரப்பு

advertisement by google

காஞ்சிபுரம் உட்கோட்டம், பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழம்பி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி மலர் (40). மலர் கடந்த 3ம் தேதி அன்று கீழம்பி ஏரியில் மாடு மேய்த்துவிட்டு வேப்பமரத்தடியில் அமர்ந்துகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர், மலரின் கழுத்து மற்றும் வாயை அழுத்தி பிடித்ததால் மலர் மயங்கியுள்ளார்.

advertisement by google

அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன தங்க நகைகளை (3 சவரன் தாலி மற்றும் 2 சவரன் செயின்) மர்ம நபர் பறித்துச் சென்றுள்ளார். இதையடுத்து மலரின் மகன் வினோத்குமார் பாலுச்செட்டிசத்திரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

advertisement by google

இவ்வழக்கினை விசாரணை செய்த தனிப்பிரிவினர் மேற்படி குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட சீராளன் (39) என்பவரை கைதுசெய்து அவரிடமிருந்து வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்டனர்.

advertisement by google

இந்த நிலையில், இவ்வழக்கில் சிறப்பாகவும் புலன்விசாரணை மேற்கொண்டு மற்றும் விரைவாகவும் செயல்பட்டு வழிப்பறி வழக்கு பதிவுசெய்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்ய உதவிய பாலுச்செட்டிசத்திரம் காவல்நிலைய தனிப்பிரிவு சோமசுந்தரம் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் வேலாயுதம் மற்றும் அவரது குழுவினரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் வெகுவாகப் பாராட்டினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button