t

30 ஆண்டுகளாக கள்ளக்காதல் பேச மறுத்த கள்ளக்காதலி சரமாரி வெட்டிக்கொலை✍️55 வயது பழனியம்மாள்✍️70 வயது ராமசாமி (எ)மணி✍️முழுவிபரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

30 ஆண்டுகளாக கள்ளக்காதல் பேச மறுத்த கள்ளக்காதலி சரமாரி வெட்டிக்கொலை

advertisement by google

கரூர்: கரூர் அருகே பேச மறுத்த கள்ளக்காதலியை வெட்டிக்கொலை செய்த 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் சேவாப்பூரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி பழனியம்மாள்(55). விவசாய தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி (எ) மணி(70). பழனியம்மாளுக்கும், மணிக்கும் கடந்த 30 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது. கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக இருவரும் பேசிக் கொள்வதில்லை. இந்நிலையில் பழனியம்மாளிடம் பேசுவதற்காக அவரது வீட்டுக்கு மணி இன்று அதிகாலை 4 மணியளவில் சென்றார். அப்போது மணியிடம் பழனியம்மாள் பேச மறுத்தார்.

advertisement by google

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த மணி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பழனியம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பழனியம்மாள் பலியானார். இந்த தகவல் கிடைத்ததும் பாலவிடுதி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பழனியம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button