தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் முக்காணியில் இளம்பெண் குத்திக்கொலை – குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
ஆத்தூர் முக்காணியில் இளம் குத்திக்கொலை – குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை
✍ஆத்தூர், முக்காணியில் இளம் பெண் ஒருவரை வீட்டிற்குள் சென்று குத்திக்கொலை செயத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார்
✍தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள முக்காணியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகள் கனகா (வயது25). அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் மாரியப்பன் என்பவர் முன் விரோதம் காரணமாக இன்று (08.09.2020) காலை கனகா வீட்டிற்குள் சென்று கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அதை தடுக்க வந்த கனகாவின் மூத்த சகோதரி பிரியா (வயது26) என்பவரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த பிரியா ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
✍இது குறித்து தகவலறிந்த ஆத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாரத் தலைமையில் ஆத்தூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் செல்வி, உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.