t

தூங்கி கொண்டிருந்த திருச்சி, கோட்டை மகளிர் காவல்நிலைய, ஏட்டம்மாவின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி செயின் திருட்டு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

திருச்சி: தூங்கி கொண்டிருந்த பெண் காவலரின் கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி செயின் திருட்டு

advertisement by google

திருச்சி நவல்பட்டு பகுதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த கோட்டை பெண் காவலரின் 10 பவுன் தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

advertisement by google

திருச்சி கே.கே.நகர் காஜாமலை மெயின் ரோட்டை சேர்ந்தவர் சந்திரசேகரன், இவரது மனைவி ராஜாமணி (42). இவர் திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். (இன்ஸ்பெக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்)

advertisement by google

இந்த நிலையில் நவல்பட்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள தனது தாய் சுசிலாவிற்கு உடல்நிலை சரி இல்லாததால் பார்ப்பதற்காக நேற்று வந்துள்ளார். ராஜாமணி தாய் சுசிலா, தம்பி ராஜா, அவரது மனைவி யசோதா, தங்கை ராதிகா ஆகியோருடன் தாய் வீட்டிலேயே தங்கியுள்ளார்.

advertisement by google

இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த ராஜாமணி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் பற்றி ராஜாமணி நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

advertisement by google

ஒரு பெண் காவலரின் தாலி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button