t

கோவில்பட்டி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட கயத்தார் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 7 பவுன் தாலி செயின் பறிப்பு✍️அதே பகுதியை சேர்ந்த சஞ்சீவிநாதன் என்பவர் கைது✍️ 5பவுன் தங்க நகை மீட்பு✍️வழிப்பறி திருடர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்✍️மாவட்ட எஸ்பி ✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

இளைஞர்களுக்கு போதை தரும் கஞ்சா, புகையிலை பொருள்கள் விற்பனை செய்தால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார்

advertisement by google

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோவில்பட்டி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட கயத்தார் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 7 பவுன் தாலி செயினை பறித்து சென்று விட்டனர். இதையெடுத்து கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சிசிடிவி கேமரா உதவியுடன் வழிப்பறியில் ஈடுபட்ட பாளையங்;கோட்டையை சேர்ந்த முருகபெருமாள், சபரிமணி, சிவசுப்பிரமணியன் ஆகிய 3 பேரை கைது செய்து 7பவுன் தாலி செயின் மீட்கப்பட்டுள்ளது. இதே போன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்குட்பட்ட இனாம்மணியாச்சி பழைய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே வீட்டில் இருந்த சின்னமாள் என்ற மூதாட்டியிடம் மர்ம நபர் ஒருவர் கழுத்தினை துணியால் இறுக்கி அவர் அணிந்த இருந்த 5பவுன் தங்க நகையை பறித்து சென்று விட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த சஞ்சீவிநாதன் என்பவரை கைது செய்து 5பவுன் தங்க நகை மீட்கப்பட்டுள்ளது. வழிப்பறி திருடர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த மாதம் மட்டும் 20பேர் மீது குண்டர்தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 17நபர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள், 2நபர்கள் கஞ்சா, போதை பொருள்கள் விற்பனை செய்பவர்கள், ஒருவர் திருட்டு மணல் விற்பனை செய்தவர். இதே போன்று 27 கஞ்சா வழக்குகள் போடப்பட்டு 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்ததாக 317 வழக்குகள் போடப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு போதை தரும் கஞ்சா, புகையிலை பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி குண்டர்தடுப்புச்சட்டதில் நடவடிக்கை எடுக்கப்படும், கயத்தார்,கோவில்பட்டி நகைபறிப்பு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய டி.எஸ்.பி.கலைக்கதிரவன் தலைமையில் ஆய்வாளர்கள் ஐயப்பன், முத்து தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றாவளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button