t

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த, கட்டிட மேஸ்திரி✍️ ஆம்பூரில் பயங்கரம்✍️கைது செய்த போலீசார்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

ஆம்பூர் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த, கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.

advertisement by google

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியங்குப்பம் இருளர் காலனி தெருவை சேர்ந்தவர் பன்னீர் (வயது 50). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி பரமேஸ்வரி (42). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். பரமேஸ்வரி ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலத்தில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

advertisement by google

இந்த நிலையில் பரமேஸ்வரியின் நடத்தையில் கணவர் பன்னீருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலை 10 மணி அளவில் பரமேஸ்வரியின் மகள்கள் 3 பேரும் வெளியே சென்றிருந்தனர். அப்பொழுது கணவன்- மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

advertisement by google

இதில் ஆத்திரமடைந்த பன்னீர் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தி, கழுத்தை அறுத்துள்ளார். இதில் பரமேஸ்வரி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி இறந்து விட்டதை உணர்ந்த பன்னீர் வீட்டிலிருந்து தப்பி சென்றுவிட்டார்.

advertisement by google

பரமேஸ்வரி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் ஆம்பூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பரமேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

advertisement by google

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பன்னீரை தேடினர். இந்த நிலையில் நேற்று மாலை அவர் ஆலங்காயத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்ற போது ஆலங்காயம் போலீசார் பன்னீரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button