கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி கோவில்பட்டி செண்பகவள்ளிஅம்மன் புவநாதசுவாமி திருகோவிலுக்கு நலத்திட்டங்களும்,காமநாயக்கன்பட்டியில் பரலோகமாதா கோவில் வளாகத்தில் வீரமாமுனிவருக்கு முழுஉருவசிலை, மணிமண்டவமும் மேலும் பலபுதிய திட்டங்கள் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிவிப்புக்கும்✍️ செயல்படுத்த நடவடிக்கையெடுத்த மாண்புமிகு அமைச்சர் கடம்பூர்ராஜூ அவர்களுக்கும் ?✍️விண்மீன் நியூஸின் வாழ்த்துக்கள்மற்றும் நன்றிகள்✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
??????✍️✍️✍️கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு புதிய திட்டங்களான கோவில்பட்டி செண்பகவள்ளிஅம்மன் -புவநாதசுவாமி திருகோவிலுக்கு நலத்திட்டங்களும்,காமநாயக்கன்பட்டியில் வீரமாமுனிவருக்கு முழுஉருவசிலை மணிமண்டவமும் மேலும் பலபுதிய திட்டங்கள் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்புக்கும் அதற்கு செயல்படுத்த நடவடிக்கை எடுத்த மாண்புமிகுஅமைச்சர் கடம்பூர்ராஜூ அவர்களுக்கும் விண்மீன் நியூஸின் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்✍️✍️✍️???விண்மீன்நியூஸ்????
கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்த முதல்வருக்கும், இத்திட்டங்களைப் பெற்றுத் தந்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜுவுக்கும் அதிமுக நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் கரோனா தொற்று தடுப்புப் பணி ஆய்வு மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு புதிய திட்டங்களையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை அறிவித்தார்.
அதில், கோவில்பட்டி நகரத்தில் குடிநீர் திட்டப் பணிகளால் சேதமடைந்த 42 கி.மீ. சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் ரூ.31 கோடியில் சீரமைக்கவும்,
கோவில்பட்டி பூவனநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் ரூ.2 கோடியில் கட்டவும்,
காமநாயக்கன்பட்டியில் வீரமாமுனிவருக்கு சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முழு உருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்..
கவர்னகிரியில் உள்ள வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள மார்பளவு சிலையை மாற்றி குதிரையில் அமர்ந்து போர் புரிவது போன்ற கம்பீரமான தோற்றத்துடன் கூடிய சிலை நிறுவப்படும் என முதல்வர் அறிவித்தார்.
இத்திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வருக்கும், இத்திட்டங்களைப் பெற்றுத்தந்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜுவை வியாழக்கிழமை அதிமுக நகர நகரச் செயலாளர் விஜய பாண்டியன் தலைமையில் நகர, ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி கூறினர்.
நிகழ்வில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், அதிமுக ஒன்றியச் செயலர்கள் அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டப் பொருளாளர் அம்பிகா வேலுமணி, எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலர் சுப்புராஜ், கோவில்பட்டி பால் சொசைட்டி தலைவர் தாமோதரன், இனாம் மணியாச்சி கூட்டுறவு சங்க தலைவர் மகேஷ் குமார். அதிமுக நிர்வாகிகள் சௌந்தரராஜன் நீலகண்டன் அல்லித்துரை, பழனிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.