பிசிஜி-க்கு கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளது✍️இந்திய மருத்துவர் நடத்திய ஆய்வில் முடிவு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
பிசிஜி-க்கு கொரோனாவை தடுக்கும் திறன் உள்ளது?- இந்திய மருத்துவர் நடத்திய ஆய்வில் முடிவு
குழந்தைகளுக்கு போடப்படும் காசநோய் தடுப்பு ஊசியான பிசிஜி-க்கு கொரோனாவில் இருந்தும் மக்களை பாதுகாக்கும் திறன் உள்ளதாக இந்திய மருத்துவர் ஒருவர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லிக்கு அருகே உள்ள நொய்டாவில் இருக்கும் கொரோனா மருத்துவமனையில் கண்காணிப்பாளராக இருக்கும் டாக்டர் ரேணு அகர்வால், 30 மருத்துவபணியாளர்களிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளார். இவர்களுக்கு கடந்த ஏப்ரலில் பிசிஜி போடப்பட்டது.
கொரோனா முன்களப்பணியாளர்களாக இருக்கும் இவர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை என Indian Journal of Applied Research மருத்துவ இதழில் வெளியான கட்டுரையில் டாக்டர் ரேணு அகர்வால் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் பிசிஜி போடப்படாத மருத்துவபணியாளர்களில் குறிப்பிட்ட சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை ஆய்வில் கண்டுபிடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.