இடப் பிரச்சனையில் டீக்கடையை அடித்து நொறுக்கிய நபர் கைது?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
இடப் பிரச்சனையில் டீக்கடையை அடித்து நொறுக்கிய நபர் கைது
தென்காசி மாவட்டம்,பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்பாவூரில் வசித்து வரும் சந்திரசேகர் (55) மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரரான தங்கப்பழம் (70) ஆகியோருக்கு இடப் பிரச்சனை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சந்திரசேகரின் வீட்டு வேலை நடைபெற்று வருவதால் பிரச்சினைக்குரிய அந்த இடத்தில் ஆஸ்பெட்டாஸ் சீட் மூலம் டீக்கடை அமைத்து வியாபாரம் செய்து வருகிறார்.இதில் ஆத்திரமடைந்த தங்கப்பழம் சந்திரசேகரின் மனைவி கடையில் இருந்தபோது அங்கு வந்து அவரை அவதூறாகப் பேசி மேலும் கடையில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை உடைத்து சேதப்படுத்தி யுள்ளார்.இது குறித்து சந்திரசேகர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் திரு.கிருஷ்ணன் அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி தங்கபழம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.