இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

மனவளர்ச்சி குன்றியோரை அவமானப்படுத்தியதாக நடிகை குஷ்பு மீது புகார்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

மனவளர்ச்சி குன்றியோரை அவமானப்படுத்தியதாக நடிகை குஷ்பு மீது புகார்

advertisement by google

மனவளர்ச்சி குன்றியோரை அவமானப்படுத்தியதாக நடிகை குஷ்பு மீது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளரிடம் பேசும் போது, காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என பேசியுள்ளார். அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக பயன்படுத்தியுள்ள இந்த கருத்து மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும், சிறுமைப்படுத்தும் விதத்திலான கருத்து. ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 பிரிவு 92 (a) படி மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தும் வகையில் அவர் பேசியதற்கு வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட துணைச் செயலர் சக்கரையப்பன் தலைமையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன் வியாழக்கிழமை திரண்டு புகார் மனுவை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளரிடம் வழங்கினர்.அப்போது மாவட்டச் செயலர் முருகன், காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் சண்முகராஜ், மாவட்ட பொதுச்செயலர் முத்து, சேவா தளத்தைச் சேர்ந்த சக்திவிநாயகம், மாற்றுத்திறனாளிகள் குருநாதன், மைதீன், அந்தோணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுபோல, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கழுகுமலை காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button