மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் -அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் முக்கிய அறிவிப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் -அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் தலைமை
✍தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
✍ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 15.10.2020 அன்று காலை 11.00 மணியளவில் மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதி பாலன், M.D., Ph.D., தலைமையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் பொது அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, மற்றும் புற்றுநோய் மருந்தியல் துறை மருத்துவர்கள் மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்து மீண்ட நோயாளிகள் கலந்து கொண்டார்கள். விழாவில் மார்பக புற்றுநோயை எவ்வாறு எளிதில் கண்டறிவது, அதற்கான சிகிச்சை முறை பற்றி தெளிவாக எடுத்துக்கூறப்பட்டது. இதில் கலந்து கொண்ட நோயாளிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவ பணியாளர்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம் பொது அறுவை சிகிச்சை பிரிவில் நடைபெற்றது.
✍பின்னர் பேசிய முதல்வர் ரேவதி பாலன், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தென் தமிழகத்திலேயே முதன்முறையாக நவீன கதிரியக்க சிகிச்சை முறை விரைவில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட உள்ளது என முதல்வர் ரேவதி பாலன் தெரிவித்தார்.