தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பொம்மிடி காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
தர்மபுரி: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் பா.ஜ.,தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் நிகழ்ச்சியை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். தற்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் செல்லமுயன்றார். மணிப்பூர் சம்பவத்தை முன்வத்து முன்வைத்து அண்ணாமலையின் வருகைக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கார்த்திக் என்பவர் பொம்மிடிபோலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அண்ணாமலை மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.