ஈரோடு, பவானியில் அமைச்சர் கருப்பண்ணன் பல்வேறு நலத்திட்டங்கள் துவங்கி வைப்பு?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
ஈரோடு: பவானியில் அமைச்சர் கருப்பண்ணன் பல்வேறு நலத்திட்டங்கள் துவங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் பவானி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மத்திய கூட்டுறவு நகர வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் அவர்கள் முன்னிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் 431 பயனாளிகளுக்கு 8 கோடி ரூபாய் மதிப்பிலான முதியோர் உதவித்தொகை பொதுமக்களுக்கு குடும்ப அடையாள அட்டையின் படி ஒரு உறுப்பினருக்கு இரண்டு முக கவசம் என அனைவருக்கும் இலவச முக கவசம் சித்தோடு ஆவின் நிறுவனத்திற்கு கிராப் மெஷின் எனப்படும் மாட்டு தீவனத்தை பொடி செய்யும் இயந்திரம் மற்றும் சத்துணவு மையத்துக்கு தேவையான சமையல் உபகரணங்கள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் ஜெயராமன் வருவாய்த்துறை அலுவலர்கள் தாசில்தார் பெரியசாமி விஏஓ செந்தில் பவானி ஒன்றிய செயலாளர் எஸ் எம் தங்கவேலு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் தக்ஷிணாமூர்த்தி நகராட்சி எக்ஸ் வைஸ் சேர்மன் ராஜேந்திரன் மாவட்ட பேரவை துணைச் செயலாளர் சீனிவாசன் பவானி நிலவள வங்கி தலைவர் சித்தையன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஜே கே விஸ்வநாதன் மயிலம்பாடி வாத்தியார் என்கிற குப்புசாமி பவானி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பூங்கோதை வரதராஜ் ராசு மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்