கோவில்பட்டி அருகே தனியார் நிலத்தில் இறந்த நிலையில் கிடந்த 28 மயில்கள்? வணத்துறையினர் அதிரடி நடவடிக்கை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
தனியார் நிலத்தில் இறந்த நிலையில் கிடந்த 28 மயில்கள்
கோவில்பட்டியையடுத்த இளையரசனேந்தல் குறுவட்டம், பிள்ளையார்நத்தம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான விளை நிலத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்தது. அந்த நிலத்தில் 28 மயில்கள் இறந்து கிடப்பதாக வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது
அதையடுத்து, வனச்சரகர் சிவராம் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, இறந்த நிலையில் இருந்த 9 ஆண் மயில்களையும், 19 பெண் மயில்களையும் மீட்டு இளையரசனேந்தல் கால்நடை மருத்துவ அலுவலரால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.இதுகுறித்து பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெற்ற பின்பே, தேசியப் பறவையான மயில்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றும், கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நடுவரின் அனுமதி பெற்றபின்பு இறந்த மயில்கள் குருமலை காப்புக்காட்டில் புதைக்கப்படவுள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.