தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

வீடு புகுந்து 25 பவுன் நகையை திருடிய ஜோதிடர் கைது?சேலம் சூரமங்கலத்தில் அதிர்ச்சி? முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

சேலத்தில்வீடு புகுந்து 25 பவுன் நகையை திருடிய ஜோதிடர் கைது
சூரமங்கலம்,செப்.13-
சேலம் பழைய சூரமங்கலம் கபிலர் தெருவை சேர்ந்தவர் மெகதாஜி பேகம் (வயது 55). இவர் புதுரோடு பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஜோதிடர் பிரபு (34) என்பவரிடம் தனது மகளின் ஜாதகத்தை அடிக்கடி பார்த்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோதிடர் பிரபு, மெகதாஜி பேகம் வீட்டுக்கு சென்று ஜோதிடம் பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மெகதாஜி பேகம் வீட்டில் இருந்த 25 பவுன் நகையை காணவில்லை. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் நகை திருட்டு குறித்து அவர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தனது நகையை ஜோதிடர் பிரபு திருடியிருக்கலாம் என்று சந்தேகம் உள்ளதாக கூறி இருந்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே ஜோதிடரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், வீட்டுக்குள் புகுந்து நகையை திருடியது பிரபு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 25 பவுன் நகை மீட்கப்பட்டது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button