கோவில்பட்டியில் கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை தீயணைப்புப் படையினர் மீட்டு காவல் துறையிடம் ஒப்படைப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கிணற்றில் மிதந்த ஆண் சடலம் மீட்பு
கோவில்பட்டி அருகே கிணற்றில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை தீயணைப்புப் படையினர் மீட்டு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகேயுள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்து கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.அதையடுத்து மேற்கு காவல் நிலைய போலீஸார் தீயணைப்புப் படையினர் உதவியுடன் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டதில் அது ஆண் சடலம் என்பது தெரியவந்தது.சுமார் 45 வயது மதிக்கத்தக்க அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா, தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சடலத்தை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.