மீன் லாரி கார் நேருக்கு நேர் மோதல்?கடலூர் சாலை விபத்து 4 பேர் உயிர் இழப்பு?மீனை அள்ளி சென்ற மனிதாபிமானம் செத்த மக்கள்?முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
கடலூர் மாவட்டத்தில் சாலை விபத்து 4 பேர் உயிர் இழப்பு
.
மீன் லாரி கார் நேருக்கு நேர் மோதல்.
மீனை அள்ளி சென்ற மனிதாபிமானம் செத்த மக்கள்.
தத்ரூபமாக படம் எடுத்த நமது கடலூர் தாலுக்கா நிருபர் நண்பர்.
மீன் செத்தா கருவாடு, நீ செத்தா வெறும் கூடு என கவிஞர்கள் கூற கேட்டோம்.
இந்த கவிதையை மெய்ப்பிக்கும் வகையில் இந்த படம் உள்ளது.
உலுந்தூர்பேட்டை பைபாஸ் அருகே உள்ள வேப்பூர் கிராமம்,கடலூர் மாவட்ட எல்லையில் உள்ளது.
இங்கு உள்ள பொது சாலையில் (9/9/20) இன்று காலை மீன் கொண்டு சென்ற லாரியும் காரும் நேருக்கு நேர் எதிர்பாராத விதமாக மோதியதில் இரு தரப்பிலும் சுமார் 4 பேர் உயிர் இழந்ததாக சொல்லப்படுகிறது
மோதிய வேகத்தில் லாரி கவிழ்ந்தது அதில் இருந்த மீன்கள் சாலை ஓரத்தில் சிதறின,
அழுகை குரல்களும், அலறல் குரல்களும் ஒரு புறம் இருக்க…..
சுற்று வட்டார மக்கள் சிலர் மீன்களை அள்ளி செல்வதிலேயே கவனமாக இருந்தனர்.
இறந்தவர்களை பற்றி கொஞ்சம் கூடம் கவலைப்பட வில்லை என்று அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நிருபர் நண்பர் ஒருவர் தகவல் கொடுக்க,அதையே படமும் செய்தியும் நிருபருக்கு அனுப்ப பிறகு நமது கவனத்திற்கு வந்தது.
மனிதர்கள் மத்தியில் இருக்க கூடிய மனிதம் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டு இருக்கிறது.
என்பதை விளக்குகிறது இந்த படமும் செய்தியும் ……
கடலூர் O T யில் இருந்து நிருபர் முஹம்மது ஷாஃபி.