இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

புதுமைநகர் காமநாயக்கன்பட்டியில் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி அருகே தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

advertisement by google

கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கயத்தாறு கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தேமுதிக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார். மகளிரணிச் செயலாளர் சுபப்பிரியா, பொதுக்குழு உறுப்பினர்கள் பெருமாள்சாமி, பிரபாகரன், அவைத் தலைவர் கொம்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 10 பேருக்கு தையல் மிஷின், 500 பேருக்கு தலா 5 கிலோ அரிசி பையும் வழங்கப்பட்டது.இதில், கயத்தாறு கிழக்கு ஒன்றியச் செயலாளர் ராஜ்குமார் என்ற அருளானந்தம், மாவட்ட பிரதிநிதி சூசை மாணிக்கம், ஒன்றிய பொருளாளர் காளியப்பன், அவைத் தலைவர் சிவராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button