ஐஸ் பெட்டியில் பதிக்கி வைத்திருந்த 1000கிலோ ஆட்டு இறைச்சி பறிமுதல்?புதுச்சேரியில் பரபரப்பு ??
✍️⚡புதுச்சேரியில் பதுக்கி வைத்திருந்த 1000 கிலோ ஆட்டு இறைச்சியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மளிகை, காய்கறி, இறைச்சி, மருந்தகம் உள்ளிட்ட கடைகள் மட்டும் திறக்கப்படுகின்றன.
கடந்த ஞாயிற்றுகிழமை புதுச்சேரி சுல்தான்பேட்டை பகுதியில் இறைச்சி வாங்குவதற்காக பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி குவிந்தனர்.
இந்நிலையில் சுல்தான்பேட்டை புதுமேட்டு தெருைவ சேர்ந்த சித்திக்(42) என்பவர் சுல்தான்பேட்டை மெயின்ரோட்டில் ஆட்டிறச்சி கடை வைத்து தொழில் செய்து வருகிறார்.
கடந்த ஞாயிற்று கிழமை வெட்டப்பட்ட ஆட்டிறச்சியை விற்பனைக்கு போக மீதமுள்ள 1000 கிலோ ஆட்டிறிச்சியை பிறகு விற்பனை செய்வதற்காக ஐஸ் பெட்டியில் வைத்துள்ளார்.
இது குறித்து வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து வில்லியனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் அந்த இறைச்சி கடைக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது ஐஸ் பெட்டியில் 1000 கிலோ ஆட்டிறச்சி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பிறகு அவை அனைத்தையும் பறிமுதல் செய்த ஆணையர் ஆறுமுகம் ஆசிட் மற்றும் பினாயில் ஊற்றி அழித்தார்.
இதனை தொடர்ந்து கடைக்கு சீல் வைக்குமாறும் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யுமாறும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.