t

தம்பி கொலைக்கு பழிக்குப்பழி தலையில் கல்லை போட்டு ரவுடி படுகொலை: மாங்காடு அருகே பயங்கரம்? 2 பேர் சரண்? முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

தம்பி கொலைக்கு பழிக்குப்பழி தலையில் கல்லை போட்டு ரவுடி படுகொலை: மாங்காடு அருகே பயங்கரம்; 2 பேர் சரண்

advertisement by google

?♈?குன்றத்தூர்: பெரிய கொளுத்துவாஞ்சேரியை சேர்ந்தவர் வசந்தகுமார் (22). இவரது அண்ணன் வினோத் (24). கடந்த ஆண்டு தனது வீட்டின் அருகே உள்ள சுடுகாட்டில் நண்பர்களால், வசந்தகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசாரின் விசாரணையில், கொலை செய்யப்படுவதற்கு முன் வசந்தகுமாரை, அவரது நண்பர் ஜெயசூரியா (20) என்பவர், மது அருந்துவதற்காக அழைத்து சென்றது தெரிந்தது. இதனால் தனது தம்பியின் சாவுக்கு, ஜெயசூரியா முக்கிய காரணம் என கருதிய வினோத், ஜெயசூரியாவை பழிக்குப்பழி வாங்க முடிவு செய்தார்.

advertisement by google

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வினோத், வீட்டில் தனியாக இருந்த ஜெயசூரியாவை, “மது அருந்தலாம் வா” என தனது நண்பர்கள் மூலம் அதே பகுதியில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு வரவழைத்தார். அங்கு வந்ததும், ஜெயசூரியாவின் கை மற்றும் கால்களை கட்டிய வினோத், தனது நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கினார். பின்னர், ஆத்திரம் அடங்காமல், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து, ஜெயசூரியாவின் தலையில் போட்டனர். இதில், தலை நசுங்கி ஜெயசூரியா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து வினோத், நண்பர்களுடன் தலைமறைவானார். நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள், வாலிபர் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

advertisement by google

?♈?தகவலறிந்து மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சடலமாக கிடந்தது ஜெயசூரியா என்றும், அவர் கடைசியாக, வினோத்துடன் சென்றது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார், வினோத்தை தேடி வந்தனர். இந்நிலையில் வினோத், தனது நண்பர் லோகேஷ் (21) என்பவருடன் மாங்காடு போலீசில் நேற்று சரணடைந்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட ஜெயசூரியா மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, அடிதடி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், அவர் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button