பயனுள்ள தகவல்மருத்துவம்

செரிமானம் தொடர்பான அத்தனை பிரச்சனைக்கும் ஒரே தீர்வு தனியாதான், எதற்கு எப்படி பயன்படுத்தணும்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

செரிமானம் தொடர்பான அத்தனை பிரச்சனைக்கும் ஒரே தீர்வு தனியாதான், எதற்கு எப்படி பயன்படுத்தணும்

advertisement by google

மருந்துதான் உணவு என்ற பழக்கத்துக்கு திரும்பிவிட்டால் உணவில் அவசியம் மல்லிவிதைகள் தனியாவை சேர்ப்பது அவசியம்.

advertisement by google

தனியாவை தனியாகவே பயன்படுத்தலாம். கொத்துமல்லி விதையான இதை நம் முன்னோர்கள் பாரம்பரியமாகவே பெருமளவு உணவில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

advertisement by google

உணவில் மசாலா பொருள்களின் சேர்க்கையில் மல்லி விதைகளின் பங்கு தவிர்க்கமுடியாதது. சுவை, மணம், ருசி என்று மூன்றையும் கொண்டிருக்கும் இவை மருத்துவ குணத்திலும் பெருமளவு நன்மை செய்கிறது. மல்லியில் இருக்கும் லினலூல் மற்றும் ஜெரனில் அசிட்டேட் என்னும் மணமூட்டிகள் கூட மல்லி விதையின் மருத்துவ குணங்களுக்கு காரணமாகிறது.
உடல் செல்களை பாதுகாக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் தன்மை இந்த மணமூட்டி மூலக்கூறுகளால் தான் தனியாவுக்கு கிடைக்கிறது. அப்படி என்னவெல்லாம் இருக்கிறது தனியாவில் தெரிந்துகொள்வோம்.

advertisement by google

​தனியாவில் இருக்கும் சத்துகள்

advertisement by google

தனியாவில் குறைந்த அளவு கொழுப்புச்சத்து, புரதம் கார்போஹைட்ரேட் உள்ளது. அதோடு சோடியம், பொட்டாசியம், நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் சி ,இரும்புச்சத்து, மெக்னீஷியம் போன்றவையும் இதில் உண்டு.

advertisement by google

தனியாவை காயவைத்து அரைத்து பொடியாக்கி குழம்பில் சேர்ப்பது உண்டு. அதே போன்று தனியாவை நீரில் ஊறவைத்தும் அந்த நீரை குடிக்கலாம். தனியா தேநீர் வைத்தும் குடிக்கலாம். இந்த இரண்டுமே சிறந்த பலன் தரும்.

advertisement by google

வளரும் பிள்ளைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமே சிறந்த பலன் தரும் தனியா என்னும் மல்லி விதைகள். அப்படி எதற்கெல்லாம் இதை பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்வோம்.

​செரிமான கோளாறுகள்

செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு பொருளில் தீர்வு கிடைக்குமா என்றால் தனியாவை உதாரணமாக சொல்லலாம். வயிற்று கோளாறு, வயிற்று புண், வயிறு வீக்கம், வயிற்று போக்கு, குமட்டல், இரைப்பை பிரச்சனை, கல்லீரல் செயல்பாடு என அனைத்தையும் தீர்த்துவிடும் குணம் தனியாவுக்கு உண்டு.

குறிப்பாக வாயுத்தொந்தரவு, உணவு எதுக்களிப்பு, செரிமானப்பிரச்சனை போன்றவற்றுக்கு சிறந்த பலன் கிடைக்கும். வயிற்றுகோளாறுகளை சரி செய்யும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த தனியா கல்லீரல் சிறப்பாக செயல்பட தூண்டுதலாகவும் இருக்கிறது.

எப்படி எடுத்துகொள்ளலாம்.

தனியா பொடி – 1 டீஸ்பூன்

சுக்கு பொடி – 1 டீஸ்பூன்

பனைவெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை – இனிப்புக்கேற்ப

ஓரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து தனியா சுக்கு பொடி சேர்த்து இலேசாக கொதிக்க விட்டு தேவையான அளவு பனைவெல்லம் சேர்த்து குடித்தால் செரிமானக்கோளாறுகள் நீங்கும். நாள்பட்ட செரிமானக்கோளாறை கொண்டிருப்பவர்கள் வாரம் இருமுறை எடுத்துவந்தால் படிப்படியாக வயிறு பிரச்சனை குணமாகும்.

​நீரிழிவுக்கு மருந்து

தனியா நீரிழிவைக் கட்டுப்படுத்தும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிறந்த ஆக்ஸினேற்ற பண்புகள் மற்றும் வைட்டமின்களின் மூலமாக கொண்டிருக்கும் தனியா உடலில் ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவும். உணவின் மூலமாக ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விரும்பினால் இவை சரியான தேர்வாக இருக்கும்.

எப்படி எடுத்துகொள்ளலாம்

சிறிய டீஸ்பூனில் ஒரு டீஸ்பூன் அளவு தனியாவை எடுத்து நீரில் ஊறவைக்கவும். 8 முதல் 10 மணி நேரங்கள் வரை ஊறவிட்டு பிறகு அந்த நீரை குடித்துவந்தால் நீரிழிவுக்கு பலன் கிடைக்கும்.

​மலச்சிக்கல், வயிறு கழிசல்

இந்த இரண்டுக்குமே தீர்வாக தனியாவை பயன்படுத்தலாம். தேநீரில் மல்லி விதையை சேர்த்து குடித்து வந்தால் குடலின் தசை இயக்கங்களை தூண்டு மலச்சிக்கலை தணிக்க செய்கிறது. வயதானவர்கள் தனியாவுடன் சுக்கு சேர்த்து குடித்துவந்தால் பெருமளவு மலச்சிக்கலை வராமல் செய்துவிட முடியும்.

வயிறு கழிச்சல் நோய் இருந்தால் தேநீரில் தனியாவும் ஓமமும் கலந்த கலவையை சேர்த்து குடிக்கலாம். பலன் கிடைக்கும்.

​பெண்களுக்கான பலன்

மாதவிடாய் பிரச்சனை, அடிக்கடி வெள்ளைபோக்கு, மாதவிடாய் கால உடல் சோர்வு, ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு தனியா ஓரளவு பலன் கொடுக்கும். கூடுதலாக உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றவும் உதவும்.

எப்படி எடுத்துகொள்ளலாம்

கால் டீஸ்பூன் தனியாவை கால் டம்ளர் நீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து அதை இலேசாக கொதிக்கவிட்டு வடிகட்டி குடித்து வரவேண்டும். தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.

​சளி காய்ச்சல் தொற்று

காய்ச்சல் மற்றும் தொற்று நேரும் போதும், சளி, சைனஸ் பிரச்சனை இருக்கும் போதும் நீரில் மல்லி விதைகளை சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் அவை தீவிரமாகாமல் பார்த்துகொள்ளலாம். குழந்தைகளுக்கும் சளி பிடித்திருக்கும் நேரத்தில் தனியா தேநீர் குடித்துவந்தால் சளி, ஜலதோஷம் பிரச்சனைகள் அதிகரிக்காது. உடலுக்கு எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும். வயதானவர்களுக்கு உடல் சோர்வு நீங்கும்.

நோய்த்தொற்றை உண்டாக்கும் சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா உணவு சம்பந்தமான நோய்களை உண்டாக்கும். இதை தடுக்க மல்லி விதைகள் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இயல்பாகவே வாரம் இரண்டு முறை தனியா தேநீர் எடுத்துவந்தால் சளி, காய்ச்சல் தொற்று நேராமல் பெருமளவு தடுத்துவிடும். அதோடு ரத்த கொதிப்பு, பித்த கிறுகிறுப்பு, சிறுநீரகப் பாதை கோளாறுகள் போன்றவையும் வராமல் தடுத்துகொள்ளவும் பெருமளவு இவை உதவும்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button