தூத்துக்குடி மாவட்டம் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான புதியம்புத்தூரில் தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார்நேரில் ஆய்வு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான புதியம்புத்தூரில் தூத்துக்குடி எஸ்பி நேரில் ஆய்வு
✍கொரோனா வைரஸ் தொற்றால் கட்டுபடுத்தப்பட்ட பகுதியான புதியம்புத்தூர் தெற்கு காலணியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று மாலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
✍புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தெற்கு காலணியில் அதிக பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார். அவருடன் புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாலை மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.
✍மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேலாயுதபுரம், புதியம்புத்தூர், முப்பிலிவெட்டி, ஓட்டப்பிடாரம், புளியம்பட்டி, ஓசனூத்து, கொம்பாடி, மணியாச்சி, நாரைக்கிணறு, சவாலாப்பேரி, ஆலந்தா, காசிலிங்காபுரம், தெய்வசெயல்புரம் ஆகிய பகுதிகளுக்கும், மணியாச்சி, புளியம்பட்டி, நாரைக்கிணறு ஆகிய காவல் நிலையங்களுக்கும் சென்று பார்வையிட்டார்.