t

திருச்சி ஆட்டுச்சந்தையில் ஆடுகளை ஆட்டையை போட்டு உரிமையாளரிடமே பேரம்! 2 பேர் கைது?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

ஆடுகளை ஆட்டையை போட்டு உரிமையாளரிடமே பேரம்! 2 பேர் கைது!!

advertisement by google

திருச்சி மேல சிந்தாமணியைச் சேர்ந்த கந்தசாமி. இவர் ஆடு வியாபாரியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது ஆடு நேற்று காணாமல் போனதால் காந்தி மார்க்கெட் பகுதியில் தேடி வந்துள்ளார்.

advertisement by google

இந்த சமயத்தில் ஆட்டோவில் வந்த 2 இரண்டு பேர் மூன்று ஆடுகளை வியாபாரிகளிடம் விலை பேசி வந்தனர். அப்போது ஆட்டின் உரிமையாளரான கந்தசாமியிடமே ஆடு வேண்டுமா எனக் கேட்டுள்ளனர். இதில் கந்தசாமி ஆட்டோவில் இருந்த 3 ஆடுகளில் 1 ஆடு காணமல் போன ஆடு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.

advertisement by google

உடனடியாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் இடத்திற்கு வந்த போலீசார் ஆட்டை விற்பனை செய்து வந்த 2 பேரை கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் மேலசிந்தாமணியைச் சேர்ந்த தினேஷ், பூசாரி தெருவைச் சேர்ந்த பெரியசாமி ஆகிய இருவரும் சிந்தாமணி பகுதியில் ஆடுகளை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

advertisement by google

பின்னர் ஆடு திருடிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் குடிப்பதற்காக சிந்தாமணி பகுதியில் அடிக்கடி ஆடு திருடுவதில் ஈடுபட்டுள்ளதாகவும் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது. ஆடு திருடுவதற்கு துணை புரிந்த மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆட்டை திருடி அதன் உரிமையாளரிடமே பேரம்பேசி மாட்டிக் கொண்டுள்ளனர் ஆடு திருடும் ஆசாமிகள்!

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button