பயனுள்ள தகவல்வரலாறு

3000 வருடமாகப் பாதுகாக்கப்பட்ட உடல் கண்டுபிடிப்பு?எகிப்து பிரமிப்பு ?ஆச்சரியமூட்டும் தகவல்கள்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

3000 வருடமாகப் பாதுகாக்கப்பட்ட உடல் கண்டுபிடிப்பு..!!

advertisement by google

எகிப்து என்றவுடன் நமக்குப் பாலைவனமும், முதுகு உயர்ந்த ஒட்டகங்களும் மட்டுமே நினைவிற்கு வரும். அதனோடு பிரமிடுகளும். ஃபாரோ எனப்படும் அரசகுலத்தைச் சேர்ந்தவர்கள் தான்
முதன்முதலில் இந்த பிரமிடைக் கட்டத் துவங்கினார்கள். பல லட்சக்கணக்கான மக்களையும் அடிமைகளையும் சாறு பிழிந்ததன் விளைவாக பிரமிடுகள் கட்டி முடிக்கப்பட்டன. அந்தக் காலத்தில் இறந்து போன அரசர்கள், அரசிகள் மற்றும் ராஜாங்க அதிகாரிகளின் உடலைப் பதப்படுத்தி இதனுள் வைக்கவே இந்த பிரமிடுகள் கட்டப்பட்டன என்றும் கதைகள் உள்ளன.

advertisement by google

கடந்த 2008 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின்படி 135 பிரமிடுகள் கண்டு பிடிக்கப்பட்டது. இவற்றில் பல அளவுகளில் மிகச் சிறியவை. அதேபோல் இறந்து போனவர்களின் உடலைப் பதப்படுத்துதலும் (மம்மி உருவாக்கம்) அங்கே பிரதானமாக இருந்திருக்கிறது. அப்படி ஓர் மம்மியைத் தான் சென்ற வாரம் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

advertisement by google

கல்லறையை நெருங்க ஐந்து மாதங்கள் தேவைப்பட்டிருகின்றன.

advertisement by google

3000 வருடம் பழைமையானது..

advertisement by google

பிரான்சை மையமாகக் கொண்டு இயங்கும் ஆராய்ச்சிக் குழு ஒன்று ஒரு மாதத்திற்கும் மேலாக எகிப்தில் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. எகிப்தின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள எல் அசசெஃப் என்னும் நகரத்தில் தான் இந்த மம்மியானது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. அதனை ஆய்வு செய்ததில் அது சுமார் 3000 வருடம் பழைமையானது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் கிடைத்துள்ள இரண்டாவது மம்மி இதுவாகும்.

advertisement by google

எகிப்தில் மம்மிக்கள் கிடைப்பது சாதாரண விஷயம் தான். ஆனால் அதனைக் கைப்பற்ற ஆராய்ச்சியாளர்கள் மிகுந்த சிரமப் பட்டிருக்கின்றனர்.

1000 சிலைகள்..

இரண்டாவது கல்லறையை நெருங்க ஐந்து மாதங்கள் தேவைப்பட்டிருகின்றன. பல்வேறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய போதும் இவ்வளவு காலம் பிடித்திருக்கிறது. மேலும்
கல்லறையைச் சுற்றிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப் பட்டிருக்கின்றன.

பழங்காலத்தில் கல்லறைகளுக்குப் பாதுகாப்பாக இப்படி உருவங்களைப் புதைத்து வைக்கும் பழக்கம் பல நாடுகளில் இருந்தது என்பதை இதனோடு பொருத்திப் பார்த்தால் ஓரளவு விடை கிடைத்து விடும்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button