இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறுவரி விளம்பரங்கள்

தண்ணீர் தொட்டியில் மனித எலும்புக்கூடு?காங்கேயம் அருகே பரபரப்பு?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

தண்ணீர் தொட்டியில் எலும்புக் கூடு: காங்கேயம் அருகே பரபரப்பு

advertisement by google

காங்கேயம்: தண்ணீர் தொட்டிக்குள் மனித எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஊதியூர் அருகே கருக்கபாளையம் பிரிவில் திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் வீட்டு மனைகளை விற்று வந்தார். வீட்டுமனை பகுதியில் மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டியுள்ளார். இங்கு வீடுகள் வராததாலும் மனை பிரிவு ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ளதாலும் ஆட்கள் நடமாட்டமும் இன்றி இருந்தது. இந்த நிலையில், நேற்று தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய தொழிலாளர்கள் சென்றபோது அதன் உள்ளே மனித எலும்புக் கூடு கிடந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

advertisement by google

இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவல்படி, காங்கேயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தண்ணீர் தொட்டியில் உள்ள மனித எலும்புக்கூடு அருகே முயல் பிடிக்கப் பயன்படுத்தும் சுருக்கு கம்பிகளும் கிடந்தன. இதனால் இப்பகுதியில் முயல் பிடிப்பதற்கு வந்தவர், தண்ணீர் தொட்டி மீது ஏறி தொட்டிக்குள் விழுந்து இறந்திருக்கலாமா வேறு யாரேனும் கொலை செய்து சடலத்தை தொட்டியில் போட்டார்களா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button