வாகனச்சோதனையில் பிடிபட்ட வாகனத்திருடன்? சென்னை பட்டாபிராமில் மாட்டிய கில்லாடித்திருடன்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
பட்டாபிராம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெமிலிச்சேரி 400 அடி சாலை கருணாகர சேரி பாலம் அருகே பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலான டீம் இன்று காலை வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த விக்டர் என்ற நரேஷ் ஆண் வயது 38 தந்தை பெயர் ஜெகநாதன் என்-10, முதல் தெரு நவஜீவன் நகர் பட்டாபிராம் சென்னை 72 என்பவரை மடக்கி விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னார் மேலும் அவருடைய இரண்டு சக்கர வாகன ஆவணங்கள் கையில் இல்லை இது சம்பந்தமாக அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது அவர் பழைய குற்றவாளி என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்பத்தூர் திருமுல்லைவாயல் ஆவடி பட்டாபிராம் திருநின்றவூர் பகுதிகளில் இரண்டு சக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது, மேலும் அவரிடமிருந்து 13 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இன்று மாலை 5 மணிக்கு திருவள்ளூர் நீதிமன்றம் அனுப்பி நீதிபதி அவர்களின் உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்