தண்டவாளத்தில் அமர்ந்து கணவன் மனைவி2குழந்தைகள் உட்பட நான்குபேர் தற்கொலை? கொடைகானல்ரோட்டில் சோகம்?
திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானல் ரோடு ரயில்நிலையம் அருகில் தண்டவாளத்தில் அமர்ந்து கணவன், மனைவி இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் உத்திராபதி. இவர் தனது மனைவி சங்கீதா, 18 வயது மகள் அபிநயஸ்ரீ, 13 வயது மகன் ஆகாஷ் ஆகியோருடன் இங்கு வந்துள்ளார்.
அங்கு தண்டவாளத்தில் அமர்ந்து நான்கு பேரும் பேசிக்கொண்டு இருந்ததை சிலர் பார்த்துள்ளனர். இந்நிலையில் ரயிலில் அடிபட்டு நால்வரும் சடலமாக தண்டவாளத்தில் சிதறிய நிலையில் கிடந்தனர். போலீசார் விசாரணையில் ஒரத்த நாட்டை பூர்வீகமாக கொண்ட உத்திராபதி திருச்சியில் 8 வருடமாக தங்கி மருந்து விற்பனை பிரதிநிதியாக பணி புரிந்து வந்துள்ளார்.
அவருக்கு கடன் தொல்லை இருந்ததாகவும், இதனால் அவதிப்பட்ட அவர் ரயில் வரும்போது குடும்பத்துடன் தண்டவாளத்தில் அமர்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.