கொராவினால் சர்வதேச பொருளாதார பின்னடைவிலிருந்து இந்தியா, சீனா மட்டுமே தப்பிக்கும்? ஐ.நா அறிவிப்பு?
✍️⚡சர்வதேச அளவில் ஏற்பட உள்ள மாபெரும் பொருளாதாரப் பின்னடைவிலிருந்து இரண்டு நாடுகள் மட்டுமே தப்பிக்கும் என ஐநா ஆய்வு வெளியிட்டுள்ளது.
தற்போது உலகையே முடக்கி உள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை உருவாகும் என உலக நாடுகளுக்கு ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், உலக அளவில் ஏற்பட உள்ள இந்த சரிவில் இருந்து இந்தியாவும் சீனாவும் மட்டும் தப்பிக்கும் என்றும் ஐநா தெரிவித்துள்ளது.
ஏற்பட உள்ள பொருளாதார சரிவிலிருந்து தப்பிக்க அமெரிக்கா 2.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான தேசிய பொருளாதார திட்டத்தைத் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
ஆனால், உலகின் மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்கு கொண்ட சீனாவும் இந்தியாவும் இந்த நெருக்கடியை சமாளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளைத் தவிர அத்தனை இதர நாடுகளும் 2 அல்லது 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முதலீடுகளை இழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.