கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் சிலை அமைக்க தேமுதிக கோரிக்கை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் சிலை அமைக்கக் வேண்டும் தேமுதிக கோரிக்கை
கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை அமைக்க வேண்டும் என தேமுதிக சார்பில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தென் தமிழகத்தில் நேதாஜிக்கு பெருமை சேர்க்கும் வகையில் எந்த ஊரிலும் சிலையோ, அவர் பெயரில் எந்தவொரு பேருந்து நிலையமோ, அரசு மருத்துவமனையோ இல்லை. இதையடுத்து, கோவில்பட்டியில் அவரது சிலைக்கு இடம் தேர்வு செய்ய வேண்டும் என்பதே கோவில்பட்டி மக்களின் விருப்பம்.ஜனவரி 23ஆம் தேதி நேதாஜியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு கோவில்பட்டியில் தகுதியான ஓர் இடம் தேர்வு செய்யுமாறு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம், நகர தேமுதிக மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக செயலர் அழகர்சாமி தலைமையில் கோட்டாட்சியர் விஜயாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில், நேதாஜி நற்பணி மன்றத் தலைவர் பாலமுருகன், தேமுதிக ஒன்றியச் செயலர் சுரேஷ், அவைத் தலைவர் கொம்பையா, பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.