சேலம் மறை மாவட்ட ஆயர் சிங்கராயர் மனவிருப்பத்தோடு கற்பூர் என்ற கிராம சிறுபங்கின் உதவிபணியாளராக பணியாற்ற முடிவு?எளிய ஆயரைக்கண்டு மக்கள் வியப்பு?
ஒரு மறைமாவட்டத்தின் ஆயராக இருந்து, தன் பணிக்காலம் – பதவிக்காலம் முடியுமுன்னே, அதிலிருந்து மனவிருப்பத்தோடு ஓய்வுபெற்று, ஒரு சாதாரண பங்கில் (கற்பூர்) உதவிப் பங்குப்பணியாளராகப் பணியாற்ற முடிவெடுப்பதற்கு நிறையத் துணிச்சலும் மனத்தாழ்ச்சியும் வேண்டும்.
சேலம் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு. சிங்கராயருக்கு அந்தத் துணிச்சலும் மனத்தாழ்ச்சியும் இருக்கின்றன.
நாம் வாழும் காலத்தில் இப்படியோர் எளிமையான ஆயரை- மகானைப் பார்ப்பது மிக மிக அரிது.
ஆயர் பெருந்தகையே உங்களை நினைக்கும் போது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நீங்கள் எடுத்திருக்கும் இத்துணிச்சலான முடிவிற்குத் தலை வணங்குகிறேன்.
முன்பு இத்தகைய துணிச்சலை நம் முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டில் கண்டேன். இப்பொழுது உங்களில் காண்கிறேன்.
உங்களுக்கு இறைவன் நல்ல உடல் உள்ள நலனைத் தர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ப்ரியங்களுடன்…
-மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்.