விருதுநகரில் பராசக்திநகரில் இன்று (4.12.2020) ஸ்ரீமகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா✍️கோவில் கட்டுமான பணிக்கு அருட்பெரும் கொடையாளர், கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்களுக்கு, பரிவட்டம் அணிவித்து மேளதாளத்துடன் பொதுமக்களும் கோவில் குருக்களும் வரவேற்பு அளிப்பு✍️ முழு விவரம் -விண்மீன்நியூஸ்
விருதுநகரில்பராசக்திநகரில் கோகுலம். M. தங்கராஜ் அவர்களால் அருட்பெரும் கொடை கொடுத்து கட்டப்பட்ட ஸ்ரீமகா காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சீரும் சிறப்பாக நடைபெற்றன. விழாவில் கலந்து கொள்ள கோகுலம்.M. தங்கராஜ் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு பொதுமக்கள் அளித்தனர்.கோவில் குருக்கள் முன்னிலையில் பொதுமக்கள் கோகுலம் தங்கராஜ் அவர்களுக்கு பரிவட்டம் அணிவிக்கப்பட்டு மேளதாளத்துடன் கோவிலுக்கு அழைத்து சென்றனர்.
*ஸ்ரீ.மகா காளியம்மனும் பிரத்யோக வழிபாடும் பூஜையும் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு ஸ்ரீமகா காளியம்மன் கோவில் பொதுமக்களுடன் சென்று கோகுலம் .M.தங்கராஜ் அவர்கள் வழிபட்டார். மேலும் பொதுமக்கள் கோகுலம் தங்கராஜ் அவர்களிடம் பல கோரிக்கைகள் வைத்தார்கள். மேலும் கோவிலுக்கு தேவையான பல உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.இந்த மாதத்தில் மட்டும் இரண்டு கோவில் கட்டுமான பணிமுடிந்து கும்பாவிஷேகம் நடத்தி பொதுமக்கள் வழிபட திறந்து வைத்துள்ளார்.போன மாதம் கிறிஸ்தவ கோவில் கட்டிக்கொடுத்து திறப்பு விழா நடத்தியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்✍️✍️✍️விண்மீன்நியூஸ்✍️✍️✍️
இணையத்தில் பகிர
FacebookWhatsApp