மருத்துவப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காவிட்டால் கிரிமினல் குற்ற தண்டனை வழங்கப்படும் : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
மருத்துவப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காவிட்டால் கிரிமினல் குற்ற தண்டனை வழங்கப்படும் : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கொரோனா பாதுகாப்பில் இருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்காவிட்டால், கிரிமினல் குற்றம் கொண்ட தண்டனை வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு இன்றில் ‘கொரோனா நோய் தொற்று பாதித்த நோயாளிகளை காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் இரவு பகல் என்று பாராமல், தங்களது உயிரை பணையம் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் இவ்வாறு பணி செய்யும் அவர்களுக்கு ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. இவர்களின் நலனை மத்திய மாநில அரசுகள் கருத்தில் கொண்டதாக தெரியவில்லை. அதனால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஒரு வழிகாட்டு கொண்ட உத்தரவை பிறப்பிக்க வேண்டும் ‘, என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நிலுவையில் இருக்கும் ஊதியத்தை உடனே வழங்க அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர், மேலும் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் இதுபோன்ற வசதிகளை மருத்துவர்களுக்கு செய்து தர அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். தொடர்ந்து பேசிய நீதிபதிகள், மருத்துவப் பணியில் இருக்கு அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காவிட்டால் அது கிரிமினல் குற்றமாக கருதி, அதுகுறித்த நடவடிக்கைகள் எடுத்து தண்டனை வழங்கப்படும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.