கோகுலம்கார்டன் சார்பாக 3,000குடும்பங்களுக்கு நலத்திட்டம்10,000பேருக்கு அண்ணதானம் வழங்கும் விழா விருதுநகரில்
கோவை ,விருதுநகர்,தமிழக புகழ் கோகுலம்கார்டனின் தலைவர் கோகுலம்M.தங்கராஜ் T.மாலாதங்கராஜ் அவர்களின் திருமண நாளை முன்னிட்டு 3000 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டம் வழங்குதல் மற்றும் 10000பேருக்கு அண்ணாதானம் வழங்கும் விழா 28.10.2019 ஆகிய இன்று விருதுநகரிலுள்ள சரஸ்வதி மஹாலில் கோலாகலமாக சிறப்பாக நடைபெற்றன.விருதுநகரிலுள்ள ஏழை எளிய மக்கள் நலத்திட்டங்களை பெற்று வாழ்த்தி சென்றனர் .ஏற்கனவே பல நலத்திட்டங்கள் கோகுலம் கார்டன் சார்பாக பல வருடங்களாக இதேபோன்று வழங்கியுள்ளனர் .விருதுநகரிலுள்ள கிராமத்திற்கு கோகுலம் கார்டன் சார்பாக பாலமும் கட்டிகொடுத்துள்ளனர்.மேலும் கோகுலம் கார்டன் சார்பாக பின்தங்கிய மாணவர்களுக்கு பள்ளிகூடமும் கட்டிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .தமிழகத்திலும் ,கேரளாவிலும், புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு நேரடியாக கோகுலம் கார்டன் பணியாளர்களுடன் சென்று நலத்திட்டத்திட்டங்கள் வெற்றிகரமாக செய்து , அணைவரின் பாராட்டுகளை பெற்று சேவை செய்து வருகின்றனர், சேவை பணி சிறக்க வாழ்த்துக்கள்