கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை உடனடியாக துவக்க வேண்டியும் ,அனைத்து வகை சித்தா, ஹோமியோபதி மருந்துகளும் எளிதாக மக்களுக்கு கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் கோவில்பட்டி MLA கடம்பூர் ராஜூ அவர்களிடம் தமாக கட்சியின் இராஜகோபால் அவர்களின் தலைமையில் நேரில் சென்று கோரிக்கை மனு அளிப்பு✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
பெறுநர்
அண்ணாச்சி திருமிகு கடம்பூர் செ.ராஜூஅவர்கள்
mla
முன்னாள் அமைச்சர் செய்தி மற்றும் விளம்பரத்துறை
கரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும்
கரோனோ சிகிச்சைக்கான சித்தமருத்துவ பிரிவுகளை துவங்குவதற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் அதன் அடிப்படையில் கடந்த 13ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் தலா 100 படுக்கை வசதிகள் கொண்ட சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் துவக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவில்பட்டியில் நாளுக்கு நாள் கரோனோ பாதிப்புக்கு உள்ளாக கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் மக்களை பாதுகாத்திட கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை உடனடியாக துவக்க வேண்டும். அனைத்து வகை சித்தா, ஹோமியோபதி மருந்துகளும் எளிதாக மக்களுக்கு கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் என்று தமாக கட்சியின் இராஜகோபால் அவர்கள் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் தாமக நிர்வாகிகள் சார்யா கலந்து கொண்டவர்கள் நகரச் செயலாளர் மூர்த்தி ,நகர துணைத் தலைவர் டி விக்னேஷ் ,மாநில மாணவரணி செயலாளர் மாரிமுத்து ராமலிங்கம் எனப்பலர் கலந்துகொண்டனர்.