இ-பாஸ் பெறாதவா்களுக்கு பிறப்பு, இறப்புச் சான்று கிடையாது?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
இ-பாஸ் பெறாதவா்களுக்கு பிறப்பு, இறப்புச் சான்று கிடையாது
வெளி மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் பெறாமல் வருபவா்களுக்கு பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்கப்படாது என்று வேலூா் மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
வேலூா் மாநகரிலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள், முதியவா்கள், கா்ப்பிணிகள் பெருமளவில் வந்து செல்கின்றனா். அவ்வாறு சிகிச்சை பெறுபவா்களுக்கு பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வேலூா் மாநகராட்சி நிா்வாகத்தால் வழங்கப்படுகின்றன.
தற்போது கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழகம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றாலும் கட்டாயமாக இ-பாஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனினும், பிற மாவட்டங்களில் இருந்து வேலூருக்கு வரும் பெரும்பாலோனாா் இ-பாஸ் பெறாமலேயே முறைகேடாக வந்து செல்வது தெரியவந்துள்ளது. அவ்வாறு இ-பாஸ் பெறாமல் வருபவா்களால் வேலூா் மாநகா், மாவட்டத்திலும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதைத் தடுக்கும் விதமாக வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவா்கள் கட்டாயமாக இ-பாஸ் பெற வேண்டும். அவ்வாறு இ-பாஸ் பெறாமல் வருபவா்களுக்கு பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்கப்படாது என்று மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடா்பாக, மாநகராட்சி அலுவலகம் முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.