இந்தியா

ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் ராணுவ வீரர் விபத்தில் பலி

advertisement by google

advertisement by google

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 26. இவர், குஜராத் மாநிலம், ஆமதாபாத் ராணுவ முகாமில் ராணுவ வீரராக பணிபுரிந்தார்.

advertisement by google

விடுப்பில் வந்த இவருக்கு ஆக., 21ல் ராமநாதபுரத்தில் திருமணம் நடந்தது. செப்., 22ல் ராமநாதபுரத்தில் இருந்து தேவிப்பட்டினம் ரோட்டில், டூ – வீலரில் பாலசுப்பிரமணியன் சென்றார். பேராவூர் ரைஸ்மில் அருகே எதிரில் பொட்டகவயலைச் சேர்ந்த பாபு, 30, என்பவர் வந்த டூ – வீலருடன் நேருக்கு நேர் மோதியதில், பாலசுப்பிரமணியன் தலையில் பலத்த காயமடைந்தார்.

advertisement by google

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தீவிர சிகிச்சை பலனின்றி இறந்தார். இன்று ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button