t

ஓட்டப்பிடாரம் அருகே புங்கவர்நத்தம் கிராமத்தில் ,மின்சாரம் தாக்கி தொழிலாளி இறப்பு✍️ முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

ஓட்டப்பிடாரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்து போனார்*

advertisement by google

ஓட்டப்பிடாரம்:

advertisement by google

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புங்கவர்நத்தம் கிராமத்திலுள்ள காமாட்சி அம்மன் கோவிலில் கட்டிட பணி நடந்து வருகிறது. இங்கு எட்டையபுரம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் விக்னேஷ் (வயது 22) என்பவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தக் கோவிலுக்கு மேல் மின்சார வயர் செல்கிறது. விக்னேஷ் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சார வயரில் உடல் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். இதுகுறித்து கட்டிட மேஸ்திரி மிக்கேல்ராஜ் பசுவந்தனை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரம் தாக்கி இறந்த விக்னேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விக்னேசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் பலியானது குறித்து பசுவந்தனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button