கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

4பேர் என்கவுன்டர் செய்யப்பட்டது எப்படி? பெண் மருத்துவர் பாலியல்ரீதியாக கொன்ற கைதிகள் ?

advertisement by google

தெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி?

advertisement by google

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் லாரி ஒட்டுநர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். முன்கூட்டியே திட்டமிட்டு நால்வரும், அப்பெண்ணை கொடூரமாக கொலை செய்திருப்பதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

advertisement by google

கொல்லப்பட்ட பெண் மருத்துவர், ஷம்சபாத்தில் உள்ள நட்சத்திரா நகரைச் சேர்ந்தவர். கால்நடை மருத்துவரான இவர், கொல்லூரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். தினமும் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்படும் பிரியங்கா, சின்ஷபள்ளியில் உள்ள சுங்கச்சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து பொதுப் போக்குவரத்து மூலமாக கொல்லூருக்குச் செல்வது வழக்கம். சம்பவம் நடந்த 27ஆம் தேதி அவசர பணிக்காக மருத்துவமனை செல்ல சின்ஷபள்ளி சுங்கச்சாவடிக்கு வந்த‌ருக்கிறார்.

advertisement by google

6 மணியளவில் அங்கு வண்டியை நிறுத்திவிட்டுச் சென்ற பிரியங்காவை, முகமது அஷாவின் கும்பல் நோட்டமிட்டிருக்கிறது. ஏற்கெனவே மதுபோதையில் இருந்த அவர்கள், குரூர புத்தியால் சதித்திட்டம் ஒன்றை தீட்டியிருக்கிறார்கள். அதன்படி பிரியங்காவின் இருசக்கர வாகனத்தின் பின்பக்க டயரை பஞ்சராக்கிய கும்பல், அவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தது. இரவு ஒன்பது இருபது மணிக்கு சின்ஷபள்ளி சுங்கச்சாவடிக்கு வந்த பிரியங்கா, இருசக்கர வாகனத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டார். வண்டி பஞ்சர் ஆகியிருப்பதால் அதை தள்ளிக் கொண்டு செல்ல முற்பட்டார்.

advertisement by google

பெண் மருத்துவர் கொலை எதிரொலி : இனி பாட்டிலில் பெட்ரோல் வழங்கத் தடை..!
அப்போது அங்கு வந்த லாரி ஓட்டுநர் முகமது அஷாவும், கிளீனர் சிவாவும் உதவுவதாக கூறி பிரியங்காவை ஆள் இல்லாத இடத்திற்கு தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அங்கு சின்னகேசவலு, நவீன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறுகிறார், காவல் ஆணை‌ர் சஞ்சனர்.

advertisement by google

பிரியங்காவின் உடலை தார்பாயில் சுற்றி லாரியில் போட்டு எடுத்துச் கொண்டு கட்டபள்ளி என்ற இடத்திற்கு சென்றுள்ளனர். அங்குள்ள பாலத்தின் அடியில் வைத்து பிரியங்காவின் சடலத்தை தீயிட்டு கொளுத்திய நால்வரும், தப்பிச் சென்றுள்ளனர். சுங்கச்சாவடி மற்றும் பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சியின் அடிப்படையில், இந்த நால்வரும் தான் குற்றத்தில் ஈடுபட்டதாக உறுதி செய்திருக்கிறது சைபராபாத் காவல்துறை.

advertisement by google

என்கவுன்ட்டர் நடந்தது எப்படி ?

advertisement by google

இந்நிலையில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இன்று அதிகாலை ஹைதராபாத் – பெங்களூரு நெடுஞ்சாலையான ‘44 நெடுஞ்சாலை; அருகே 4 பேரையும் போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களிடம் பெண் மருத்துவரை எப்படி கொலை செய்தனர் ? என போலீஸார் செய்து காட்டச்சொல்லியுள்ளனர்.

அவ்வாறு செய்து காட்டும்போது, அவர்கள் நான்கு பேரும் தப்பி ஓடியதாக தெரிகிறது. அப்போது அவர்களை தடுக்க முயன்ற போலீஸாரையும் தாக்கிவிட்டு 4 பேரும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் தற்காப்பிற்காக 4 பேரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்மீன் நியூஸ் ஊடகதளம்

advertisement by google

Related Articles

Back to top button