தூத்துக்குடி சவேரியார் ஆலயத்தில் இரட்டை கோபுரம் திறப்புவிழா – ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
தூத்துக்குடி சவேரியார் ஆலயத்தில் இரட்டை கோபுரம் திறப்புவிழா – ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை
✍தூத்துக்குடி மறைமாவட்டம் T. சவேரியார்புரம் தூய சவேரியாரின் 515 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இரட்டை கோபுரம் திறப்பு விழா மற்றும் அசன விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கினார். மறைவட்ட முதன்மை குரு ரேலிங்டன் மண்ணின் மைந்தர்கள் அருள்தந்தை ஸ்டாலின், அருள்தந்தை ஜஸ்டின், அருள்தந்தை கிங்ஸ்டன், அருள்தந்தை வினித் ராஜா, பங்குத்தந்தை சேசு நசரேன் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் ஊர் நிர்வாகிகள் அனைத்து அன்பியங்கள் மற்றும் இறைமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். மேலும் ஆயர் ஸ்டீபன் அந்தோணி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலில் இரட்டை கோபுரம் திறப்பு விழாவும் அதன்பின்பு ஆடம்பர பாடல் திருப்பலியும் அதன் பின்பு ஊர் ஆசனமும் நடைபெற்றது. இந்த நிகழ்வை பங்குத்தந்தை சேசுநசரேன், ஊர் நிர்வாகிகள் பங்கு இறைமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.