திருமணமான பெண்கள் வேறொரு உறவில் ஈடுபடப்போவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள் என்ன தெரியுமா?
கணவன்-மனைவி உறவு என்பது மனித உறவுகளில் மிகவும் முக்கியமானதாகும். திருமணம் முடிந்து எத்தனை வருடங்கள் ஆனாலும் அவர்களின் உறவு தொடங்கியபோது எப்படி அன்பு நிறைந்ததாக இருந்ததோ அதேபோல் இறுதிவரை இருக்க வேண்டும். சிலசமயங்களில் உங்கள் துணைக்கு உங்கள் மீதிருக்கும் அன்பு மீது உங்களுக்கு சந்தேகம் எழலாம், மேலும் உங்கள் துணை இன்னும் நேசிக்கிறாரா என்பதை விரைவில் கண்டுபிடிப்பது முக்கியம்.
திருமணமாகிவிட்டது என்ற ஒரே காரணத்திற்காக உங்கள் மீது உங்கள் மனைவிக்கு எப்பொழுதும் அன்பு இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. உங்கள் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பும், அக்கறையும் காலப்போக்கில் மறையலாம். இது உங்களின் இல்லறத்தில் பல உறவுச்சிக்கல்களை உருவாக்கும். இதனால்தான் பெண்கள் கள்ளக்காதலில் ஈடுபடுகிறார்கள். இந்த பதிவில் உங்கள் மனைவிக்கு உங்கள் மீதிருந்த அன்பு காணாமல் போயிட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்.
பகிர்ந்து கொள்வதை நிறுத்துவது உங்கள் மனைவி உங்களுடன் பகிர்வதை நிறுத்த முடிவு செய்யும் போது, உங்கள் உறவு வீழ்ச்சியடையத் தொடங்குகிறது. உங்கள் பணத்தில் அவர்கள் எதையும் செய்ய விரும்பாமல் அவர்களின் தேவைகளை குறைத்துக் கொண்டாலோ அல்லது அவர்களின் பணத்திலேயே தேவைகளை பூர்த்தி செய்து கொண்டால் அவர்கள் உங்களுடன் எதையும் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை என்று அர்த்தம். அதேபோல உங்கள் தேவையை உங்கள் பணத்திலேயே செய்து கொண்டால் அவர் உங்களை காதலிக்கவில்லை என்று அர்த்தம்.
உங்களிடம் மட்டும் எரிச்சலாக நடந்து கொள்வத
உங்களின் மனைவி உங்களிடம் மட்டும் எப்பொழுதும் எரிச்சலாக நடந்து கொண்டால் அவர்கள் உங்களை காதலிக்கவில்லை என்று அர்த்தம். இது அவர்கள் வேறொரு உறவுக்கு தயாராக இருப்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம். பொதுவாக நமக்கு பிடித்த ஒருவரிடம் நாம் எப்போதும் எதிர்மறையாக நடந்து கொள்ளமாட்டோம். மாறாக அவர்களை உற்சாகப்படுத்தவும், சிரிக்க வைக்கவும்தான் முயலுவோம். உங்களின் சிறிய செயல்களுக்கு கூட அவர்கள் எல்லையில்லாத கோபம் அடைந்தாலோ அல்லது உங்களின் வழக்கமான செயல்களுக்கு கூட எரிச்சல் அடைந்தால் உங்கள் மனைவி உங்கள் மீது தீராத வெறுப்பில் உள்ளார் என்று அர்த்தம்.
உங்கள் கால் மற்றும் மெசேஜ்களுக்கு பதிலளிக்காமல் இருப்பது
பெண்கள் பொதுவாக உணர்ச்சிகளால் இயக்கப்படுகிறார்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்களிடம் எதுவும் சொல்ல முடியாவிட்டாலும் கூட அவர்கள் உங்களை அழைப்பார்கள், அதனால் அவர்கள் உங்கள் குரலைக் கேட்க முடியும். நீங்கள் உங்கள் மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்பும்போது, அடுத்த சில மணிநேரங்களில் அவர் பதிலளிக்கவில்லை என்றால் அது உங்களை தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நபராக அவர் பார்க்கவில்லை என்பதற்கான அறிகுறியாகும். நீங்கள் போன் பண்ணும்போது வேண்டுமென்றே அதனை தவிர்த்தால் அது வெளிப்படையான அறிகுறியாகும்.
உங்கள் குடும்பத்தை மதிக்காமல் நடப்பது
திருமண உறவில் பிரச்சினைகள் வருவதற்கு முக்கிய காரணமே அவர்களின் புகுந்த வீடு பற்றி எழும் புகார்களும், விவாதங்களும்தான். ஒரு பெண் தன் கணவனை உண்மையாக நேசிக்கும்போது, அவருடைய குடும்பத்தை மதிப்பார்கள்.அவர்களின் குடும்ப உறுப்பினர்களை மரியாதையாக நடத்துவார்கள். மாறாக கணவரின் குடும்பத்தினரை அவமதிப்பது தான் அந்த குடும்பத்தில் இனியும் ஒரு அங்கமாக இருக்க விரும்பவில்லை என்பதன் அர்த்தமாகும்.